அருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே! உங்களைத் தூண்டி கவியுலகுக்குள் ஈர்த்த உங்கள் தமிழ் ஐயாவைப் (பேராசிரியர் திரு மன்சூர் அலி) போற்றுதல் எம் கடனுமாம். வாழ்க அவர்கள்! ''சிறுவனுக்கு''ச் சிறந்த கவிதைகளை பெருந்துணையாம் கருத்துகளைப்பற்றி இயற்ற ஊக்கிய பெருமை ஐயாவுக்கே. - முனைவர் செல்வா

*

இவ்வேளையில் என் பள்ளித் தமிழாசிரியர், என்னை எப்போதும் வகுப்பில் கவிஞரே என்று அழைக்கும் திரு கிருட்டிணன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.

என் கவிதைகளை வகுப்பில் கறும்பலகையில் எழுதி அதை மேம்படுத்துவார், பாராட்டுவார், அசை பிரித்துக் காட்டுவார், அணிகளைக் குறிப்பிட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்.

மனதில் பதியும் வண்ணம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை சொல்லித் தந்த என் பள்ளி ஆசிரியர்.

இப்போது நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொஞ்சம் அசை, கொஞ்சம் எதுகை கொஞ்சம் மோனையோடு புதுக்கவிதைகள் எழுதுகின்றேன் இசைக்கவிதைகளும் எழுதுகின்றேன்

அன்புடன் புகாரி
20171212

No comments: