என் வாட்சப் குழுமத்தில் ஒரு சுவாரசியமாக உரையாடல். அதில் இன்று இப்போழுது இட்ட ஒரு மறுமொழி உங்கள் பார்வைக்கு:
அன்பினிய நண்பருக்கு (பெயரை நீக்குகிறேன்),
1. அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிக்கிறார்களே
2. மோடியின் or RSSன் அறமற்ற செயலை சில அறிவுடைய இந்துக்களும் ஆதரிக்கிறார்களே
இதில் 1 பிழை 2 பிழையில்லை என்கிறீர்கள். இரண்டுக்குமான வேறுபாட்டை மிக நுணுக்கமாகக் கொண்டுவருகிறீர்கள்.
அதாவது
அ. மோடியின் அறமற்ற செயலை ஆதரிப்பது பிழை
ஆ. அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிப்பது பிழையில்லை
அதாவது இதில் நுணுக்கமாக நீங்கள் கொண்டுவரும் கருத்து என்னவென்றால்,
a.மோடி என்பவர் அறமற்ற செயலைச் செய்கிறார்.
b.அப்படிச் செய்யும் செயலைத்தான் நாம் ஆதரிக்கக் கூடாது
c.ஆனால் மோடியை ஆதரிக்க வேண்டும்.
இனி கீழே உள்ள உரையாடலைப் பாருங்கள்:
================================
நண்பர் 2:
Dont think this will happen anytime soon. We are still evolving to become humane
Same thing happened on a mass scale when Modi was CM of Gujarat
அன்புடன் புகாரி
அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிக்கிறார்களே? என்ன காரணமாக இருக்கும்?
================================
எதற்கு வந்த பதில் எது என்று புரிகிறதா? மோடி செய்த அறமற்ற செயலைத்தான் சுட்டிக்காட்டி இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது. ஆகவே உங்கள் கண்ணோட்டப்படி கூட அது சரியாகவே கையாளப்பட்டுள்ளது.
அடுத்தது....
மோடி மதவெறிக்குத் துணை நிற்கிறார், ஆகவே அவர் அறவழியில் செல்லவில்லை. மதவெறிக்குத் துணை நிற்கும் மோடியை ஆதரிக்கும் சில இந்துக்கள் அறமற்ற செயலை ஆதரிப்பதால் அறம் விட்டு விலகுகிறார்கள். இதை உரக்கச் சொல்வது உண்மையான அறம். பயந்து ஒதுங்குவது அறத்திற்குச் செய்யும் கேடு.
இப்படி நான் சொல்கிறேன். சரியாகத்தானே சொல்கிறேன்?
மதவெறிக்குத் துணை நிற்பவரை எப்படி அறக்காவலர் என்று கருதமுடியும்? அவர் ஒரு தேசத்தின் பிரதமர். உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் அவரை விமரிசனம் செய்யும் உரிமை உண்டு அல்லவா?
நாளையோடு அவர் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்திவிட்டு, நாட்டில் நடக்கும் மதவெறியாட்டங்களையும், மொழிவெறியாட்டங்களையும், இனவெறியாட்டங்களையும் ஒடுக்கட்டும். நான் அவரை எப்படிப் பாராட்டிப் புகழ்ந்து இவர்தான் எங்கள் பிரதமர் என்று உரக்கச் சொல்கிறேன் என்று பாருங்கள்
>>>ஒரு மனிதனையோ, ஒருவருக்கும் தீங்கிழைக்காத அவன் நம்பிக்கைகளையோ, மற்றொருவர் சொல்லாலோ, எழுத்தாலோ, செயலாலோ காயப் படுத்தி சூறையாட நினைப்பது அறமில்லையென்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. <<<<
இது என் அழுத்தமான கருத்தும்கூட. ஆகவேதான் இங்கே யாரும் தனிமனிதக் கீறல் செய்துவிடமுடியாது. தீங்கிழைக்காத நம்பிக்கையைக் குதறி எடுத்துவிடமுடியாது.
அன்புடன் புகாரி

No comments: