குறள் 1081


கனத்த
காதணி அணிந்த
இவள்
தேவ மங்கையோ
அல்லது
அரியதொரு மயிலோ
அடடா
இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே
என் நெஞ்சு

*

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு


*

3 காமத்துப்பால் - 1 களவு இயல் - 109 தகையணங்குறுத்தல் - குறள் 1081

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

2 comments:

ஆதவன் said...

nice.. keep it up.

Anonymous said...

பிரமாதம் ஐயா
வணங்கி மகிழ்கிறேன்
நன்றி
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.