பேராற்றின்
பெருங்கரைகளுக்கு
அப்பால்

அலைவிழுந்து
சிதறித் தெறிக்கும்
சிறுகுழி
அழுக்குமணல்
விளிம்புகளில்

நிறமிழந்த
சிறுநுரைக்கூட்டம்
ஓடியோடி
காலக்காற்றில்
உடைந்தழியும்
காட்சிதனைக் காண்பார்

கிட்டியது
சாட்சியென்று...

பேராற்றின்
பேரெழில் ஆற்றலையே
தூற்றித் தூற்றித்
தாழ்வார் தரமிலார்

அவர்
உள்ளம்
கள்ளமேயன்றி
நல்லதோ சொல்
நுண்ணறி நெஞ்சே

அன்புடன் புகாரி

1 comment:

அருள்மொழிவர்மன் said...

அருமையான வரிகள்,மிகவும் ரசித்தேன்.