* * * *

நம்பிக்கை
மகா வலிமையானது

காடுகடக்கும்
ஒரு சிட்டுக்குருவிக்கு
அடர்த்தியான
இறகுகளைக் கொண்ட
சிறகுகளைப்போல

நம்பிக்கை
இல்லா நிலையில்
மரணம்
மிக நெருக்கமானது

வழுக்கும்
கண்ணாடிச் சிலையை
நடுங்கும் கரங்களில்
ஏந்தி நிற்பதைப்போல

அன்புடன் புகாரி
20160810


No comments: