எந்த மார்க்கமும்
அந்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ளப் படாததாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
அடுத்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ள விரும்பாத
எண்ணங்களைத் தருவதாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
பகுத்தறிவாளர்களென்று
சொல்லிக்கொள்பவர்களால்
பிழையான
பொருள் கூறப்படுவதாகவே
இருக்கிறது

இவை
மூன்றுக்குமே
முக்கிய காரணம்
மனிதர்களின்
அறியாமைகளும்
வக்கிரங்களும்தானே
அன்றி
மார்க்கங்கள் அல்ல

No comments: