நேசிப்பு ஒன்றையே
வேர்களாகக் கொண்டு
உருவான
பசுமைத் தாவர உலகம்
ஒன்று உண்டு

அதன் பெயர்
இஸ்லாம்

வெறுப்புக் காய்கள்
அத்தாவரங்களில்
காய்க்காது

திணிக்கப்படும் வெறுப்புகளும்
அன்புக் கனிகளாகப்
பழுத்து
அந்நிய மடிகளில்
சகோதரமாய்
விழும்

-அன்புடன் புகாரி

No comments: