தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிருத்தவர்கள் அனைவரும் அவரவர் பண்டிகைகளுக்கு ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை. புலம்பெயர்ந்த கனடாவிலும் குடும்பங்களுக்கு இடையே இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் சங்கங்கள் வழியாக தனித்தனியே பண்டிகைகள் கொண்டாடப்பட்டுவந்தாலும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டை இதுவரை யாரும் முன்வந்து இங்கே செய்ததில்லை.
இந்த ஆண்டு Tamilnadu Community Centre என்கிற தமிழ்ச் சமூகச் சங்கத்தின் நிறுவனர் திரு வல்லிக்கண்ணன் அதைத் தொடங்கி வைத்தார். அவரின் அழைப்பு எனக்கு வந்தபோது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
ஜூன் 23 வெள்ளியன்று ஒரு விருந்து மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அசத்திவிட்டார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
தமிழர்களுள் ஒரு முன்னோடியாக நண்பர் வல்லிக்கண்ணன் இந்த ஏற்பாட்டைச் செய்த இதே ஆண்டு, முதன் முறையாக டொரோண்டோ நகரசபையும் நோன்பு திறக்கும் ஏற்பாட்டையும் தொழும் ஏற்பாட்டையும் அது பற்றி சொற்பொழிவுகள் ஆற்றும் ஏற்பாட்டையும் செய்து வியக்க வைத்தது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினரை அரவணைப்பதில் முதன்மையானவர் என்பதை உலகே அறியும். அவரின் ஆட்சியில் இன்னும் இதுபோன்ற நிறைய எதிர்பார்க்கலாம்.
நன்றி
வல்லிக்கண்ணன்
டொராண்டோ மாநகரசபை
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

No comments: