இந்துக்களெல்லாம்
தீவிரவாதிகளென்றால்
இந்தியா என்றோ
இடுகாடாகிப் போயிருக்கும்

கிருத்தவர்களெல்லாம்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்து போயிருக்கும்

முஸ்லிம்களெல்லாம்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
அழிந்து போயிருக்கும்

தீவிரவாதம்
ஓர்
லாபநோக்குடைய
வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல
வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக்
கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதம் வெறுக்கும்
நெஞ்சங்களை
பிஞ்சு வயதிலிருந்தே
தேயாப்
பிறைநிலாக்களாய்த்
தெளிவாய்
வளர்த்தெடுப்போம்

அது ஒன்றே
தீவிரவாதம் ஈனும்
வல்லரசுகளைக்
களையெடுக்கவல்லது

அன்புடன் புகாரி
20171124

No comments: