ஒரு மார்க்கம் என்பது
யாதெனில்
வாழ்வைச் சீர் செய்யும்
அறநெறிச் சட்டங்கள்
அமல் படுத்தும் திட்டங்கள்

நியாயங்களுக்குப் பாதுகாப்பு
தர்மங்களுக்கு அரண்

ஆனால்
சட்ட அமலாக்கம்
ஏழை எளியவர்களுக்கு
எதிராக ஏவப்படுகின்றன

அரசியல்வாதிகளும்
அதிகாரவர்கங்களும்
அச்சம் கொள்வதுமில்லை
அடங்குவதுமில்லை

பற்றவைத்தவன் இருக்க
நெருப்பைச் சாடுவது
கையாலாகாதத்தனம்

குற்றவாளியைப் பாதுகாத்து
நிரபராதியைக் கொல்வது
காட்டுமிராண்டித்தனம்

No comments: