44 எது சரி ?


இந்தக் கோபம்
எனக்குப்
பாதுகாவலனா பகைவனா

இந்த அறிவு
எனக்கு
விடுதலையா தண்டனையா

இந்த மனசு
எனக்குச்
சிறகா சிறையா

இந்த ரசனை
எனக்கு
லாபமா நஷ்டமா

இந்தப் பிறப்பு
எனக்கு
பாக்கியமா சாபமா

இந்த மோகம்
எனக்கு
விருந்தா விசமா

இந்தப் பசி
எனக்கு
உயிரா மரணமா

No comments: