200408 தெய்வீக ராகம்


தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்

தெளிவான பாடல்
கேட்பாரோ இல்லை

எறிந்தவர் நெஞ்சில்
தவறொன்றும் இல்லை

ஏன் இந்த ராகம் - அவர்
எச்சிலில் கரைந்தது

தெய்வீக ராகம்
தெருக்குப்பை மேட்டில்
கிடந்தால்தான் என்ன
அது தெய்வீக ராகம்

தெய்வத்தின் செவிகள்
எப்போதும் உண்டு
எப்போதும் இருந்தால்
அதன் அருமைக்கு இழுக்கு

இப்போது வந்து
எடுத்தள்ளி அணைத்து
தெய்வீக ராகம்
மனக் கண்ணீரில் கழுவ

தெய்வீக ராகம்
தெளிவான பாடல்
தெய்வத்தின் மடியில்
ஆராரோ ஆரிரரோ

1 comment:

cheena (சீனா) said...

தெய்வீக ராகம் தெருக்குப்பை மேட்டில். எறிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கலாச்சார மாற்றம். தேவைக்கு மேல் பணப் புழக்கம். ஊடகங்களின் ஊடுறுவல்கள். இணையத்தின் இம்சை. இத்தனையும் தான் காரணம் தெருபக்குப்பை மேட்டுத் தெய்வீக ராகங்களுக்கு. கவிஞனின் ஆதங்கம் புரிகிறது.

//தெருக்குப்பை மேட்டில்
கிடந்தால்தான் என்ன
அது தெய்வீக ராகம் தான்//

உண்மை உண்மை. பாராட்டுகள்