வேறென்ன இருக்கு?


ஊறும் விரல் சிவக்கும்
ஊறிடும் வாய் சிவக்கும்
தீரத் தீரச் சுரக்கும்
தீதரும் நதிமூலம்

வாரி வாரி இறைத்தும்
வற்றா நிலம் கண்டு
மாரி மழையும் வெட்கும்
ஆழக் கடலும் தோற்கும்

அடிமன ஆசையில்
அம்மணக் கோலத்தில்
முடிவற்ற துடிப்புகள்
மண்மீது விழும்வரை

No comments: