கனவுகள் ததும்பும் கருவிழிகள்..


கனவுகள் ததும்பும்
கருவிழிகள்
உணர்வுகள் மிளிரும்
சிறுஇதழ்கள்

தினமொரு அஞ்சலாய்
வந்துவந்து
மனதினுள் வார்ப்பது
பாற்குடங்கள்

வனமலர்க் குவியலில்
நின்றாடும்
வண்ணத்துப் பூச்சியின்
உள்ளமென

குணவதி மனரதி
வான்மதியே
என் நெஞ்சினில் பொங்குது
தேன்நதியே

பிறப்பதும் இறப்பதும்
நிகழ்ச்சிகள்தாம்
பிறக்கிறார் இறக்கிறார்
பலரும் இங்கே

குறிஞ்சியாய்ப் பிறப்பவர்
ஒரு சிலரே
நறுமலர் நீயும்
அதில் ஒன்றே

முல்லையும் மல்லியும்
கோத்தெடுத்த
நல்லதோர் கவிதையும்
எனக்குள்ளே

மெள்ளத்தான் அசையுது
பூத்து
சொல்லத்தான் காதலர்
வாழ்த்து

No comments: