கவிதைபற்றி கவிதை


கவிதைபற்றி
கவிதையெழுத வேண்டுமா
அதைக் கவிதைகேட்டு
கவிதைமனம் மறுக்குமா

கவிதைபற்றி
கவிதையென்ன எழுதுவேன்
எனைக் கவிதைகேட்கும்
கவிதைமனம் வாழ்த்துவேன்

தவிப்பதற்கும்
துடிப்பதற்கும் எதுவேண்டும்
இந்தக் கவிதைமகள்
வைத்திருக்கும் மனம்வேண்டும்

புவிநிறைந்த
பூக்களள்ளி தூவுகிறேன்
இவள் பொன்மனதை
வாழ்கவென்று வாழ்த்துகிறேன்

இணையமென்ற
மேடைதனில் சந்தித்தேன்
உயர் இதயமென்று
அப்பொழுதே சிந்தித்தேன்

அணை தாண்டும்
வெள்ளமென உணர்வுநதி
இவள் உள்ளமெங்கும்
தித்திப்பு அமுதநதி

தனைமறந்து
கவிரசிக்கும் கவிதைமலர்
என்றும் தரமிழந்து
போகாத தீபச்சுடர்

நினைவுகளில்
நிச்சயமோர் இடமுண்டு
நட்பு நெகிழவைக்கும்
இதயத்தின் அன்போடு

No comments: