அகவியாடும் இதயமயில்


கதைகதையாய்க் கவிதைகளாய்
எதைவடித்து நிமிர்ந்தாலும்
அதைவடிக்கும் முன்னெனக்குள்
அகவியாடும் இதயமயில்
பதைபதைப்பு அடங்கிமெல்லப்
புத்துயிராய்ப் பூப்பதனால்
எதையெதையோ எழுதியெழுதி
எந்நாளும் துயில்கின்றேன்

*

எடுத்தப் பிறப்பிங்கெனக்கே
எழுத வென்றிருக்கலாமோ
குடித்தக் கள்ளொன்றிருப்பின்
கன்னித் தமிழன்றி வேறோ
வடித்தக் கவித்தேனே
இவ்வையம் மூடிக்கிடந்தும்
கொடுக்கும் கனலென்றனுள்ளே
குறைந்தழியக் கண்டிலேனே

No comments: