திருமண வாழ்த்து


எப்போதோ சின்னச் சின்னதாய் எழுதியவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு இங்கே ஒவ்வொன்றாய் இடுகிறேன். இந்த வலைப்பூ என் திறந்தவெளி நாளேடாய் ஓரளவுக்காவது இருக்கட்டும்.


இன்பத்தில் கண்கள் கோத்து
....துன்பத்தில் கைகள் கோத்து
உள்ளங்கள் பின்னிப் பிணையும்
....உயர்காதல் கொண்டே வாழ்க

கண்ணோடு இமையாய்ச் சேர்ந்து
....கல்யாண உறவைப் போற்றி
விண்ணேறும் சுகங்கள் பார்த்து
....வளமோடு நெடுநாள் வாழ்க

No comments: