செந்தீ வளர்க


சுழல் பந்தென
களத்தில் இறங்கிய
செயல் வீரனின்
வர்த்தகச் சோலை

தழல் கொழுந்தெனத்
தாவி எழுந்தது
தமிழ் மகனிவன்
நற்பணி வாழ்க

நிழல் போலவே
வணிகர் தேவையில்
நலம் பேணிடும்
இளைய நிலவனே

குழல் இனிமையும்
செந்தீச் சுடரும்
குணம் ஆக்கியே
வெற்றி குவித்திடு

No comments: