மணநாள் வாழ்த்து


திருமண வாழ்த்து

ஆனந்தத் தேனூறுதே
அன்புச் சுடர் - உங்கள்
மணவிழா நாளறிந்தே...
மாணிக்கத் தேர்மீதினிலே
முல்லைக்கொடி - உங்கள்
மரோபா கைகோத்தே...
வானெங்கும் ஒளிவீசியே
வனப்போடு - என்றும்
பேரின்ப பவனிவரவே...
நானிங்கும் பூத்தூவியே
கவிதாவனம் - நின்று
நயமோடு வாழ்த்துகின்றேன்...

No comments: