நாட்டிய அரங்கேற்றம்


சங்கத்தமிழ் மணம் வீசிவரும்
சந்திரப் பொன்னெழில் மேடைதனில்
சந்தனக் கிண்ணங்கள் பேரழகைச்
சிந்திடும் நாட்டிய அரங்கேற்றம்
இந்தப் புவி தனில் வேறெவர்க்கும்
என்றும் கிடைக்கா மகுடங்களை
எந்தன் கண்மணிகள் சூடிக்கொள்ள
எழிலாய் கலையாய் நிகழட்டுமே

No comments: