198307 மன ஓடத்தில் நீ பாய்மரம்



ஒரு பழைய இந்திப் பாட்டின் மெட்டில் வந்து விழுந்த வரிகள்


உயிரே நலம்தானா
உறவே சுகம்தானா
மன ஓடத்தில் நீ பாய்மரம்
உனை நான் நினைக்கிறேன்

கணிமடி ஏந்தும் கடிதங்களில்
உன் கனவு கண்டேன்
தனிமடல் வீசும் வசந்தங்களில்
உன் தவிப்பு கண்டேன்
உயிரே உயிர்க்கருவே
உனை நான் நினைக்கிறேன்

ரசனைக் கடலின் ஆழத்திலே
ஓர் முத்தெடுத்தேன்
ரகசியமாய் அதன் காதினிலே
என் காதல் சொன்னேன்
அழகே அலைச்சுருளே
உனை நான் நினைக்கிறேன்

ஏனோ எங்கும் காணாமல்
எனைத் தேடுகிறேன்
ஏற்றியச் சுடராய்
உன் விழிச் சிமிழில் நானிருந்தேன்
விழியில் விழித் துளியில்
உனை நான் நினைக்கிறேன்

நிலவே போதும்
நெருப்பினில் வேகும் காலங்களே
நிழலுக்கும் வேண்டாம்
நீயற்ற வெறுமை வாழ்வினிலே
நாளை உனைக் காணும்
மனம் பாடும் காவியம்

No comments: