ஒரு கிளியினை நான் கண்டேன்


ஒரு கிளியினை நான் கண்டேன்
என் மனதினைப் பறிகொடுத்தேன்
அந்தக் கிளியின் இருப்பிடமோ
ஒரு சின்னஞ்சிறு தங்கக்கூண்டு

வண்ண வண்ணச் சிறகுகள்தாம்
அந்தச் சின்னஞ்சிறு கிளியிடத்தில்
மெல்ல மெல்ல விரித்ததனை
எந்த வானிலும் பறந்திடலாம்

விரித்திட வழியில்லையே
அது பறந்திடும் நிலையில்லையே
தனிமையின் மஞ்சங்களில்
அது தழுவுது தன்னைத்தானே

அதிர்ஷ்டங்கள் ஓரிடத்தில்
வெறும் அவலங்கள் வேறிடத்தில்
வாழ்க்கைப் புயல் வெளியில்
இந்த வரங்களின் ராஜ்ஜியமே

No comments: