பேராசிரியர் பசுபதி


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும்மேல்
தமிழ்நாட்டை விட்டுத்
தமிழறியா நாடுவாழ்ந்தும்
முத்தமெல்லாம் தமிழுக்கே
என்று...

கன்னித்தமிழோடும்
கணித்தமிழோடும்
கற்பூரக் காதல்பூண்டு...

ஒட்டிக்கிடக்கும்
உச்சிவான மச்சுயேறிய
பொன்மதியே...!

மாசற்ற மரபோடு
மணம்வீசும் எண்ணங்களால்
தூசற்று வாழ்கின்ற
நற்பண்பின் அதிபதியே...!

அன்புக் கவிமதியே...!
அண்ணன் பசுபதியே...!

அவைக்கழைத்த உங்கள்
அழகுமொழிக்கு
கவியடியேனின்
காலை வணக்கங்கள்!

O

சந்தவசந்தத்தில்
உங்கள் தலைமையில்
நெஞ்ச நன்றியைச்
சிந்திப் பாடிட
இந்தநல் வாய்ப்பினைத்
தந்த தலைமைக்கு
முந்தித்தருகிறேன்
வந்தன நன்றிகள்...!

No comments: