இனி
ரத்தம்பட்டுச்
சொட்டும்போது
கத்திக்குக்கூட
கருணை வரலாம்
மனிதர்களுக்கு
வரப்போவதில்லை

அடுத்த வெட்டுக்குப்
பாயும்முன்
அது
அரைநொடியேனும்
அச்சங் கொள்ளலாம்
மனிதன்
அச்சம் கொள்ளப் போவதில்லை

உள்ளங்களில் கருணை
உயிர்களிடத்து அன்பு
என்ற
செத்தொழிந்த
பழஞ்சொற்ப் பிரயோகங்களை
இனி
எங்கே சென்று தேடுவது

வன்முறை எகிறிப்பாய
மனிதம் நடுநடுங்க
வானம் இடிந்தால்தான்
இனி இங்கே 
மாற்றம் நிகழுமா

என்றால் 
இனியோர் காலையும்
இரத்தம் சொட்டச் சொட்ட
வானமே நீ
விடியவேண்டாம்
இடிந்தே போ

அன்புடன் புகாரி
20160720

No comments: