அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு
அதிலேதும் மாற்றமே
இல்லை

ஆனால்
ஒரே வாழ்க்கையை
இருவர் பங்கிடும்போது
சேதாரம் செய்கூலியைத்
தவிர்க்க முடிவதில்லை

அக்கறையாய்
ஆசைகள் குவித்து
அழகாய்ச் செய்த
பொன்னாரமும்
நாள்பட நாள்பட
விருப்பப் பட்டியலியேயே
இருக்கும் என்றில்லை

பொன்னாரத்தைப்
புதுப்பிக்க
பிடித்தவண்ணமாய்
வடித்துக்கொள்ள

என் உளிக்கும்
உன் உளிக்கும்
சமமான
அனுமதி வேண்டும்

எக்காலமும்
என்னையும் உன்னையும்
நமக்காகச் செதுக்க

அன்புடன் புகாரி

No comments: