நிறுவனங்களும்
நிராயுதபாணிகளும்

மொத்தமாய் விழுங்குவதைச்
சுத்தமாய் அறியாமல்

வாழ்க்கையை விற்று
வேண்டாத வசதிகள்

சமூகக் கௌரவங்களாய்
வெட்டிச் செலவுப் பழக்கத்தை உருவாக்கி
தொடர் கடனாளிகளாய் ஆக்கி
பொருள் குவிக்கும் சக்திகள்


உலகை மயாண வெளிகளாக்கும்
நாசங்கள் மோசங்கள் துவேசங்கள்
அறமற்ற நிறுவனங்கள்

No comments: