20160729





*
நண்பர்களே, தயவு செய்து இங்கே மதங்களுக்கு இடையேயான பிரச்சினைகளைப் பேசாதீர்கள்.
நான் இணக்கமாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று நாளெல்லாம் சிந்தித்து எழுதுகிறேன்.
மதச்சண்டை போடாதீர்கள்.
எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.
அது மதத்தின் குறை இல்லை. மனிதனின் குறை.
முதலில் நாம் மாறுவோம். பின் மற்றவர்களை மாற்றுவோம்
இந்த உலகை அமைதிப் பூங்காவாக சொர்க்கவெளியாக வாழ்வுச் சோலையாக ஆக்குவோம்.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொருவரும் இங்கே சொல்லுங்கள்.
நன்றி

*
இன்றெழுத்திச் செல்வதுவும் என் கவிதைகளே.
வன்முறையைத் தகர்த்தெறியாவிட்டால் அது என்ன கவிதையா?
நல்லிணக்கத்தை அள்ளித் தராவிட்டால் அது என்ன கவிதையா?
நான் எழுதுவேன், இனியும், இன்னமும் நிறைய எழுதுவேன்.
வன்முறை என்பது ஓர் அறியாமை.
அதை அகற்ற என் கவிதைகள் பல்லாயிரம் விரல்களாய்ப் பல்கிப் பெருகும்

*
>>>மதமென்ற அமைப்பு
மனிதன் கண்ட ஆட்சிக்
கான அரசமைப்பு<<<
உலகில் மதத்தின் பெயரால் நிகழும் எந்த ஆட்சியும் நல்லாட்சியாய் இருக்கமுடியாது.
எல்லா மதங்களையும் அள்ளியணைத்து எல்லா இனங்களையும் ஆரத் தழுவி எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் அரசு ஒன்றே நல்லரசாக இருக்க முடியும். அதுவே வெல்லும்.
கனடா அப்படியானதொரு அன்னைத் தெரிசா கருணை அரசு!
*
>>>எங்கள் மத வாழ்க்கையே வாழ்க்கை என்று சொல்வது சரி யில்லைதானே.<<<
தன் வீட்டை தன் குடும்பத்தை தன் நாட்டை நேசிப்பதுபோல மனிதன் தன் மதத்தையும் நேசிக்கத்தான் வேண்டும்.
என் மதம் நல்ல மதம் என்று சொல்வதில் யாதொரு பிழையும் இல்லை.
உன் மதம் வீணாப்போன மதம் என்று சொல்வதுதான் மனிதத்தனமே அல்ல.
அந்தப் பதர்கள் அழியவேண்டும்.
அப்போதுதான் வன்முறை ஒழியும்.
உலகம் அமைதியின் மடியில் தவழும்

*
வேந்தன் அரசு >>>கடவுள் என்பது சிலரது கொள்கை. அறிவியல் ஒப்புவது இல்லை.<<<
அறிவியல் ஒப்புதல் தேவையே இல்லை.
அறிவியல் ஒப்புதல் தேவையே இல்லாதவைதான் நம்பிக்கைகள்.
கடவுள் ஒரு நம்பிக்கை
இவள் தான் என் அம்மா என்பது ஒரு நம்பிக்கை
இவள் என் மகள் என்பது ஒரு நம்பிக்கை
நாளை உயிரோடிருப்பேன் என்பது ஒரு நம்பிக்கை.
நம்பிக்கையால் ஆனதே இவ்வுலகு!

*
>>>காபாவுக்குள் ஒரு கருங்கல் இருக்கிறது. அதை ஏன் போற்றி சுற்றிவருகிறார்கள்??<<<
உங்களுக்கு இஸ்லாத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? முறையாகப் படியுங்கள்.
முதலில் குர்-ஆனைக் கையில் எடுங்கள். பின் முகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்
பிறகு உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நல்ல விடை உங்களுக்கே கிடைக்கும்.
என்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.
வன்முறை ஏன் கூடாது என்பதுபோன்ற கேள்விகள் உண்டா என்னிடம் கேளுங்கள்.
நல்லணிக்கம் எதுக்கு என்று தோன்றுகிறதா? என்னிடம் கேளுங்கள்!

*
நண்பா,என்னிடம் ஒரு மதம் பற்றிய கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வேன். நீ அந்த நூலைப் படி எல்லாம் புரியும் என்றுதானே சொல்வேன்.
அல்லாமல் நான் இங்கே அந்த மதம் பற்றி எல்லாம் எழுதினேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நான் அந்த மதத்தைப் போதிக்கவந்திருக்கிறேன் என்றுதானே சொல்வீர்கள்?
என்னை எந்தப் பக்கமும் செல்லவிடாமல் தடுப்பது ஏன்? நான் நல்லிணக்கம் பேசுகிறேன் என்பதாலா? வன்முறை கூடாது என்று சொல்கிறேன் என்பதாலா?
இதுதான் சத்திய சோதனையா?

*
இலக்ஷ்மணன் ஒண்டிபுதூர் திருமூர்த்தி >>>நாம் இந்த மதம் விட்டு மனதார இணக்கம் பற்றி பேசினால் கண்டிப்பாக நல்லிணக்கம் வரும். <<<
அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்
ஆனாலும் மறந்துவிடாதீர்கள்
RSS அமைப்பிற்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிறுவவேண்டியது உங்கள் கடமை
ISIS அமைப்பிற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிறுவ வேண்டியது என் கடமை.
அதைச் செய்தால்தான் நல்லிணக்கம் விரைந்து வரும்.
நான் குற்றவாளி வா கைகோர்க்கலாம் என்றால் யார் வருவார்?
நான் நிரபராதி என்னைக் குற்றவாளியோடு சேர்த்துப் பார்க்காதே என்று சொன்னாலல்லவா கைகோர்க்க எல்லோரும் வருவார்கள்?

*
எங்கள் அன்பு கவிஞரே
உங்களை யாரோ
மனம் சார்ந்து ஆழமாய்
காயப்படுத்தி விட்டாதாய்
உங்கள் எழுத்துக்கள்
எங்களை யோசிக்க வைக்கிறது
ஆனால் ஒன்று நீங்கள்
என்னதான் விளக்கம் தந்தாலும்
வீம்புக்கு பேசும் உள்ளம்
அதை ஏற்காது
அத்திகம் நாத்திகம்
இருவருமே பேசி முடிவெடுப்பது
இல்லை முடிவெடுத்து
பின் விவாதிப்பது
நிச்சயம் உடன்பாடு புரிதல்
உருவாக சாத்தியமே இல்லை
//தீவிரவாதிக்கு மதம் இல்லை
அது எந்த இயக்கமோ அமைப்போ
அவர்கள் தங்களுக்காக
கட்டமைப்ப உருவாக்க மதத்தை
தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி ஆதாயம் அடைகிறார்
எந்த மதமும் இன்னொரு உயிரை கொல்வதை ஏற்காது தீவிரவாதி அதை மட்டுமே செய்கிறான்
அப்படி இருக்கும் ஒருவனை
எப்படி மதம் சார்ந்து யோசிக்க
/// எல்லா மதங்களிலும்
நிறை குறை இருக்கு அதை யாரும்
மறுக்க முடியாது
எனக்கு எம்மதமும் சம்மதமில்லை
ஆனால் அதற்காய் யாரையும்
இழிவாய் பேசுவதும் உடன்பாடும்
இல்லை
நீங்கள் ஆயுள் வரை போதித்தாலும்
சிறு துளி மாற்றம் கூட இந்த சமுகத்தில் நிகழ்த்திட முடியாது
இது அனுபவ உண்மை
எல்லாமே அவரவர் எண்ணமே
சில விஷமிகளின் சீண்டலுக்கு
உங்கள் பொன்னான பொழுதுகளை
வீணாக்குவது வருத்தமே
>>>தேவி பாலா
*
இந்த உலகமே நானென்று நினைக்கிறேன். அந்த நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
*
மனிதனின் வக்கிரம்தான் ஜாதியை உருவாக்கிய வண்ணம் இருக்கும். அதனுள் நல்லவர்கள் சேர்ந்துவிட்டால், வக்கிரம் வென்றதாக ஆகிவிடும்.

*
உண்மையைச் சொல்வதானால், எதுவுமே (சாதி, இனம், நிறம்.. ... .. ) ஒழிக்கப்படவேண்டியவை அல்ல.
எதனுள்ளும் இருக்கும் பாகுபாடுகள்தாம் ஒழிய வேண்டும்.
இறைவனை வணங்கும் இடத்தில்கூட பாகுபாடு வைத்திருக்கும் நம் ஊரில் பாகுபாட்டை எப்படித்தான் ஒழிப்பது என்பதுதான் 100 மில்லியன் டாலர் கேள்வி

*
நான் கடவுள் மறுப்பைத் தவறென்று எங்குமே சொல்லவில்லை.
ஆனால் அவர்களுள் பலர் கடவுளை நேசிப்பவர்களை வன்முறை செய்கிறார்கள்.
அது கூடாது. அது நல்ல பகுத்தறிவல்ல.
நல்ல பகுத்தறிவும் சிறந்த ஆன்மிகமும் பிற நம்பிக்கைகளை நோகடிக்கவே விரும்பாது. மனிதநேயமே எல்லாம் என்று உணர்ந்ததாய் இருக்கும்.
அது எங்கே என்றுதான் கடவுள் மறுப்பாளர்களிடம் தேடுகிறேன்!

*
>>>இந்து கடவுள் இல்லை என்று கிறிஸ்தவன் சொல்கிறான். கிறிஸ்தவ கடவுள் இல்லை என்று இந்து சொல்கிறான். இந்த இரண்டு கடவுளும் இல்லை என்று முஸ்லிம் சொல்கிறான். இவர்கள் மூவரும் தனித்தனியாக சொல்றத நான் மொத்தமா சொல்றேன் இது தப்பா என்று கேட்டவர் பெரியார்.<<<<
அங்கே ஒரு பூ பூத்திருந்தது
அதை ரோஜா என்றான் ஒருவன்
மல்லிகை என்றான் மற்றவன்
முல்லை என்றான் மூன்றாமவன்
நான் அங்கே பூவே இல்லை என்றேன்
இது தப்பா 



No comments: