20160719

புத்தர் அப்படித்தான் போதித்தார். கடவுள் இல்லை என்றார். அன்பே கடவுள் என்றார். அன்பால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்றார். ஆசையைக் கொல் என்று எல்லோரையும் துறவியாகச் சொன்னார்.
ஆனாலும் இந்த உலகம் அன்பால் நிறையவில்லையே. ஆசையைக் கொல்லவில்லையே.
எங்கே குறை இருக்கிறது சொல்லுங்களேன்?

*
>>>>கடவுளிடம் பயப்படுவது தான் பக்தி என்ற தங்கள் கருத்தை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.
பயம் எங்கு வருகிறதோ அங்கு சிந்தனை வராது. சிந்திக்க மறுப்பதுதான் பக்தி. <<<<<
உண்மையைச் சொன்னால் உங்களுக்க்கு ஏன் சிரிப்பு வருகிறது? அப்படியாக அந்த உண்மை இருக்கக் கூடாது என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குற்றப்பத்திரிகைகளை எல்லாம் எங்கோ வாசித்துவிட்டுப் போக ஆசைப்படுகிறீர்களா?
நான் கடவுளை நன்புகிறேன் என்றால் என்ன அர்த்தம். கடவுள் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்று அர்த்தமா?
நீங்கள் கடவுளை நம்பவில்லை என்றால் என்ன அர்த்தம் கடவுள் சொல்வதை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்றுதானே அர்த்தம்.
இங்கே ஒத்துப் போவது யார்?
எனக்கு என் அம்மாவிடம் அப்பாவிடம் குருவிடம் பயம் இருந்தது. கல்வியிடம், பரிச்சையிடம், போட்டிகளிடம், பயணத்திடம், என்று பலவிடத்தும் பயம் இருந்தது, அதனால் நான் பாதுகாப்பானேன். துளி அறிவையும் இழக்கவில்லை. வளர்ந்தேன்.
பயம் தந்த எச்சரிக்கையால், நான் அதிகம் வென்றேன், தோற்கவில்லை. பயமற்ற நிலையில் எனக்கு அலட்சியப் போக்கு வந்திருக்கும். அதனால் நான் கடுமையாக உழைத்திருக்க மட்டேன், அதனால் நான் தோல்விகளையே சந்தித்திருப்பேன்.
*
>>>தான் சரியாக இருந்தாலும், பணம் என்பதை எப்படியாவது ஈட்ட வழி கண்டு மற்றவர்கள் அதை வைத்து நம்மை அழிப்பார்கள் என்பதனால் வந்த சிக்கலே இது. <<<
மிகவும் உண்மை நண்பரே
அறவழியில் பணம் ஈட்டாமல் ஊழல் வழிகளில் பணம் ஈட்டுபவர்களை யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
யார் அறத்தின் வழி அழுத்தமாகச் செல்கிறார்களோ அவர்கள்தான் முயன்று கேடுகெட்டவர்களை அழிக்க வேண்டும்.
அழிக்கவேண்டும் என்றதும் உடனே வன்முறையால் என்று நினைக்கக் கூடாது.
அதையும் அறவழியில்தான் அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் அறமற்றவர்களாக ஆகிவிடுவோம்

*
நம்புகிறவர்களிடம் கடவுளை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் பணியைப் பார்த்தாலே உலகம் அமைதி அடையுமே?
ஏன் உங்களுக்கு இந்த வன்முறை?
வன்முறைதான் ஒரு நாத்திகனுக்கான அடையாளமா?
நீங்கள் வன்முறையாளரா?

*
>>>>கொலைப்பழி உள்ள சங்கராச்சாரியார் நாத்திகர் என்றால் அப்துல்கலாம் நாத்திகரா ??<<<
அப்துல் கலாம் மத நல்லிணக்கத்தோடு இருந்தது உங்களுக்க்குப் பிடிக்கவில்லையா?
அப்துல் கலாம் நானறிந்து எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை.
அப்துல் கலாம் நானறிந்து எந்த ஊழலும் செய்ததில்லை.
அப்துல் கலாம் நானறிந்து திருட்டு, கொலை, கொள்ளை, என்று எதிலும் ஈடுபட்டதில்லை.
ஆகவே அவர் ஒரு நல்ல ஆன்மிகவாதியாய்த்தான் தெரிகிறார் என் பார்வைக்கு.
>>>சங்கராச்சாரியார் நாத்திகர் என்றால் அப்துல் கலாம் நாத்திகர்தானே<<<<
இதுதான் உங்கள் முத்தாய்ப்பான கேள்வி. நான் எங்கே சங்கராச்சாரியார் நாத்திகர் என்று சொன்னேன்.
அப்துல் கலாமிற்கு இட்ட வன்முறை, கொலை, கொள்ளை, ஊழல் என்ற பட்டியல் எல்லாவற்றையும் இவருக்கும் இட்டுப் பாருங்கள். இது எதையும் அவர் செய்யாதிருந்தால் அவர் நிச்சயமாக நாத்திகர் இல்லை.
அப்துல் கலாமின் கண்ணோட்டத்தில், அவர் அறிந்த வகையில் அவர் யாரை எப்படி ஆய்ந்து நல்லவர் கெட்டவர் என்று முடிவு செய்கிறாரோ அப்படியே அவர் நடந்துகொள்வார். அதில் தலையிட எனக்கோ உங்களுக்கோ ஏதேனும் உரிமை உள்ளதா?
மற்றபடி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. **அறவழியில் ஆய்ந்து** குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள். அது அரசின் பணி, நீதியாளர்களின் பணி. நான் அத்தனை அறிவுடையவன் அல்லன்.

*

அதில் (நாத்த்கம் என்ற பெயரில்) கடுமையான வன்முறையைக் கையாள்கிறீர்கள்.
இணங்குவதுதான் வன்முறைத் தடுப்பு வைத்தியம்.
உங்களால் இணங்கவே முடியாது என்பதை நீங்கள் காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.
எல்லோரும் உங்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் என்ற சர்வாதிகாரம் உங்களைப் போன்ற நாத்திகர்களிடம் மிக அதிகம்.
கடவுள் இல்லை என்கிறீர்களா? அப்படியே இருங்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடன் வன்முறை காட்டாதீர்கள்.
மதம் இல்லை என்கிறீர்களா எந்த மதத்திலும் இருக்காதீர்கள். ஆனால் மதம்பேணி வாழ்பவனிடம் வன்முறை காட்டாதீர்கள்.
மதம் என்ற பெயரிலோ கடவுள் என்ற பெயரிலோ நாத்திகம் என்ற பெயரிலோ அரசியல் என்ற பெயரிலோ வன்முறையில் எவன் இறங்கினாலும் அவனை ***வன்முறையாளன்*** என்று அழைத்து உரிய தண்டனையை வாங்கித்தரப் போராடுங்கள். நான் பாராட்டுவேன்.
வன்முறையாளனை கடவுள் மதம் அரசியல் நாத்திகம் என்ற எந்த அடைமொழி இட்டும் அழைக்காதீர்கள்.
வன்முறையாளன் வக்கிரக்காரன். அழிக்கப்பட வேண்டிய விசப்புழு!

*
நாத்திகம் பேசுவது பிழையே இல்லை. ஆனால் ஆத்திகரை சொல் வன்முறையால் தாக்குவது பிழை.
வன்முறை எவரும் எவரிடத்தும் பிரயோகிக்கக் கூடாது.
நான் ஆத்திகர்களின் பக்கம் இருப்பதாகவும் நாத்திகர்களைத் தாக்குவதாகவும் பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால் நான் வன்முறை மறுப்பாளனாய் மட்டுமே இருக்கிறேன்.
இருந்துகொண்டு, வன்முறை செய்யாத ஆத்திகரையும் நாத்திகரையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்

*
>>>பிறரை இழிவு செய்வதும் தீண்டாமை என ஒதுக்குவதும் கொடிய வன்முறைதானே சார்<<<
அது மகா கொடுமையான வன்முறை. அந்த வன்முறை கொலை பாதகத்தைவிடக் கொடியது
ஆத்திகரும் இழிவு செய்தல் ஆகாது, நாத்திகரும் இழிவு செய்தல் ஆகாது.
மனிதர்களாய் மனிதர்களை மதித்துப் போற்றி வாழவேண்டும்!

*
>>>அதன் நிறை குறைகளை விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் பொதுவானதுதானே<<<
நிச்சயமாக நிறை குறைகளை அலசுவதுதான் அறிவுடமை.
ஆனால் முட்டாளே, மூர்க்கனே, கேடுகெட்டவனே என்று வசைபாடுவது வன்முறையல்லவா?
உங்களுக்குத் தெரிந்த நல்லதை நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள். கேட்ப்போர் கேட்கட்டும் கேட்காதோர் விட்டுச் செல்லட்டும். ஆனால் முரட்டுத்தனமாய் பாய்ந்து மேய்ந்து கடித்துக் குதறி....
இதெல்லாம் வன்முறை இல்லையா?

*







No comments: