உன்
கையில் இருக்கும்
உணவு
என்னுடையது

ஆனால்
உன்
கையின் மீதான
என் பயம்
நிரந்தரமானது

என் பசி
உனக்கான அதிகாரம்
எனக்கான
கை விலங்கு

தாழ்த்தப்பட்டுவிட்டேன்
என்றோ

தாழ்ந்தே கிடப்பேனோ
இன்றும்

பசி
விலங்குதான்

ஆனால்
அது இன்று
உன்மீது
சீறிப் பாயும் விலங்கு

அன்புடன் புகாரி

No comments: