20160726

மனிதர்களை யாசிக்க விடாமல் ஈகையை அள்ளி வழங்கச் சொல்கிறது இஸ்லாம்.
அதற்கான பயிற்சியும் மன உறுதியும் ரமதான் மாதத்தில் வழங்கப்படுகிறது.
எல்லாமே மனிதர்களைக் கொண்டுதான் மனிதர்களுக்குச் செய்யப்படுகின்றன .
கட்டளை மட்டும்தான் இறைவனுடையது, காரியமெல்லாம் மனிதர்களுடையதுதான்.
இது சரி இது பிழை என்பதைத்தான் இறைவன் நறுக்கென்று சொல்லிமுடிக்கிறான்.
அதுதான் அறம், அன்பு, அறிவு!

*
>>>இருப்பவர்கள் உதவ ஈகை உடன் செல்வம் வேண்டும் அதனால் இது பெருங்கொடை ஆனால் செல்வமே இல்லாத எவருக்கும் ஈகை செய் என்று சொன்ன அல்லா தந்துள்ள செல்வங்கள் அறம், அன்பு, அறிவு ஆனால் நமக்கு இவை செல்வம் சென்று தெரிவதில்லை உண்மையில் இம்மூன்றும் தான் முக்கிய கொடைகள் என்றும் அதன் பண்பு கொடுக்கக்கொடுக்க வளரும் இயல்புடையது. கண்ணுக்குத் தெரியாமல் நம்பிக்கை எனும் ஆலவிருட்சமாக வளர அது சுயநலமில்லாத கொடையாக இருக்க வென்டும். (இலட்சுமணன் ஒண்டிப்புதூர் திருமூர்த்தி)<<<<
அருமை.
உண்மையில் இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதோடு நபிபெருமானார் வரலாற்றில் ஒரு சம்பவம்.
நபிபெருமானாருக்குப் போர் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அந்தக் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் ஒரு முறை. அதிலும் பல கட்டளைகளை இடுகிறார்கள்.
பெண்களைக் கொள்வது, குழந்தைகளைக் கொல்வது, முதியவர்களைக் கொல்வது என்பதெல்லாம் கூடாது.
சரணடைந்தவனைக் கொல்லக்கூடாது.
ஒருவழியாய் போர் முடிந்ததும், தோற்றவர்கள் அடிமைகளாய் கொண்டுவரப்படுகிறார்கள்.
அந்த அடிமைகள் நன்கு கற்றவர்கள் என்று நபிபெருமானார் அறிகிறார்கள்.
ஆகவே, தன் ஊரில் உள்ள கல்வியறிவில்லாதவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்துவிட்டால், அத்தனை பேருக்கும் விடுதலை என்று சொல்கிறார்கள்.
அதாவது அடிமைகளுக்கு ஆசிரியர் அந்தஸ்து.
நபிபெருமானாருக்கு கல்வி *அறிவின்மீதும், எதிரிகளிடத்தும் *அன்பின் மீதும், யுத்த *அறத்தின்மீதும் அளப்பரிய விருப்பம்

*
மதங்கள் என்று சொன்னால்தான் உலகம் பிரியும் வாய்ப்பு இருக்கிறது. (மத நல்லிணக்கம் ஒன்றே சேரும் வழி)
இறைவன் என்று சொன்னால் உலக மக்கள் எல்லோரும் இணையும் வாய்ப்பே இருக்கிறது.
அல்லாஹ் என்றால் அரபு மொழியில் இறைவன் என்று பொருள். ஆங்கிலத்தில் God என்று பொருள்.
இறைவன், கடவுள், ஆண்டவன் என்று பலவாராய் அழைக்கிறோம் அல்லவா அதுபோலத்தான் அல்லாஹ்.
ஆனால் அல்லாஹ் என்பதற்கான விளக்கம் சில கடவுளர்களிடமிருந்து மாறுபட்டதாய் இருப்பதால் அல்லாஹ் என்று சொல்வதையோ அல்லது என்போன்று தமிழில் இறைவன் என்று சொல்வதையோ பலரும் விரும்புகிறார்கள்.
இறைவன் மனிதன் இல்லை
இறைவனுக்கு உருவம் இல்லை
இறைவன் ஒருவனே
இறைவனுக்கு இணையில்லை. இணைவைத்தல் கூடவே கூடாது
இறைவன் மகா பெரியவன்
இறைவன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற கருணையுடையோன் / அருளுடையோன்
இறைவன் தேவைகளற்றவன்
இறைவன் மனிதர்களிடமிருந்து அறம் அன்பு அறிவைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை

*
>>>நான்மணிக்கடிகை, திருக்கடிகம், இனியவை நாற்பதூ, இன்னா நாற்பதுஎன
பதினெட்டின் கீழ்கணக்கின் திரூக்குறள் என இவற்றில் இல்லாத எதைஇஸ்லாமிய மார்க்கம் புதியதாய்
சொல்கிறதூ<<<
நீங்களே அப்படியான காப்பியங்களோடு இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவது மகிழ்வாக இருக்கிறது.
நல்லறம் சொல்லும் முறை இஸ்லாத்தின் தனிச்சிறப்புதான். ஆனால் சொல்வதோடு நின்றுவிடாமல் அதைக் கடைபிடிப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து இறைவன் பயத்தை அதற்கு பாதுகாப்பாய் வைத்தது மிகச் சிறப்பு.
எப்படியோ உலகம் அமைதி வழியில் மனிதநேயம் கண்டு வாழவேண்டும் என்று எல்லா மார்க்கங்களும் சேவை செய்ய வேண்டும்.
அதுதான் தேவை
அந்த வழியில் கேடில்லாமல் செல்ல மத நல்லிணக்கம் மிக முக்கியம்
>>>இந்தியாவில் தங்களின்
தாய் மதத்தவரான இந்துக்களோடூ இணங்கியும் நயந்தும்
நடந்து கொள்வது ஏன்ப
தாகும்.<<<<
இஸ்லாத்தின் தாய் மதங்கள் கிருத்தவமும் யூதமும் ஆகும்.
இணங்கி நடந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் சரி. ஆனால் சகோதரத் துவத்தோடுதானே தவிர நீங்கள் சொல்வதுபோல நயந்து அல்ல. நயந்து என்பது அடிமைப்பட்டு என்பதுபோல் ஒலிக்கிறது.
எல்லா மதங்களும் சகோதர மதங்கள் என்று தோளோடு தோள் சேர்த்து சமத்துவம் பேணி சுமுகமாக இணக்கத்தோடு வாழவேண்டும்
>>>>>எததற்கெடுத்தாலும்
நபிகள் சொன்னார்,
எங்கள் மார்க்கம் சொல்கிறது என்பதெல்லாம் இந்தியாவில் வேண்டாமே.<<<
அதாவது இந்தியாவில் வேறு எந்த மார்க்கமும் வாழ அனுமதிக்க மாட்டீர்கள். அப்படித்தானே?
உங்கள் மதவெறியை நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். உங்களை மாற்றும் பேறு எனக்குக் கிடைத்தால் மகிழ்வேன். உங்களிடம் பிழையான எண்ணங்கள் பல சூழ்ந்து கிடக்கின்றன.
அவை உங்களை அழித்துவிடும், கவனம்!

*
தலை விரித்தாடும் மதவெறியை நம் மதங்கள் சொல்லித் தந்த ***அன்பு அறம் அறிவு*** கொண்டு பார்க்க வேண்டும், சீர் செய்ய வேண்டும்.
நல்லவர்களைப் பார்த்து நாம் நல்லவர்கள ஆவோம்.
கெட்டவர்களைப் பார்த்து கெட்டவர்கள் ஆவதையா மதங்கள் சொல்லித் தந்தன?
மத நல்லிணக்கத்துக்கு எதுவெல்லாம் தேவையோ அதை எல்லாம் செய்பவர்கள்தான் உன்மையான மதப்பற்று உள்ளவர்கள்.
செல்லும் மார்க்கம் யாதாகினும், வணங்கும் இறைவன் ஒருவன் தானே?
சகோதரத்துவம் நாசமாகக்கூடாது. அதனால் உலகம் அழிந்துவிடும். சகிப்புத் தன்மையே அதற்கான அரு மருந்து.
உன்னுடையது உனக்கு
என்னுடையது எனக்கு
அவ்வளவுதானே?
சொல்வன்முறை, செயல்வன்முறை, எண்ணவன்முறை ஆகிய எல்லா வன்முறைகளிலிருந்தும் விலகுவோம், உலக அமைதிக்கு ஒரு சிறு துரும்பையாவது நகர்த்துவோம், சகோதரர்களே!
மதங்கள் பற்றியே எழுதாமல், கவிதைகளோடு மட்டுமே வாழ்ந்திருந்த நான், இப்போது நல்லிணக்கம் தேடி ஒரு தீயணைப்புப்படையைப் போல நெருப்பைத் தணிக்க ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்து கொஞ்சம் எழுத வந்திருக்கிறேன்.
எனக்கான வாழ்த்துக்களை நான் உங்களிடமிருந்தெல்லாம் எதிர்பார்க்கலாமா நம்பிக்கையோடு?

*
>>>இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை பகுத்தறிவின்பாற்பட்டு விளக்குங்கள்.
1. கொள்கலனின் உருவம் கொள்ளும் நீரைபோன்றவரா?
2 காற்றைப்போல் உணர்வால் மட்டும் உணரக்கூடிய வரா?
3. அணுவைபோல் கருவிகளன்றி காணப்படாதவரா?
4. ஒளியைபோல் புலன்களுக்கு மட்டும் உணரக்கூடியவரா
5. காந்தம், ஈர்ப்புவிசை போல் ஒரு ஆற்றல் மட்டுமா?
6 விண்வெளிபோல் யாதுமற்ற வெறுமையா?
7. அல்லது பிறிதொன்று எனில் அது என்ன?<<<<<
உங்கள் சிந்தனைக்கு அற்பாற்பட்டவன் இறைவன் என்கிறது இஸ்லாம்!
-இறைவன் ஒருவனே
-இறைவனுக்கு இணையில்லை
-அவன் மனிதனில்லை
-அன்பும் அருளும் அவன்
-மறுமைநாளின் நீதிமான்
அறியத் தந்த விடயங்கள் இவை போல வெகு சிலதான்!

*
உங்கள் ரேகையும் என் ரேகையும் வேறு.
உங்கள் ரேகையும் உங்கள் பிள்ளையின் ரேகையுமே வேறு.
நீங்கள் நேசிக்கும் இறைவனை அப்படியே நேசிக்கும் இன்னொருவரின் ரேகையும் உங்கள் ரேகையும் வேறு.

அட, உங்கள் இடது கை ரேகையும் வலதுகை ரேகையும் வேறு வேறு.
என்றால் இணக்கம் இணைவு சகோதரத்துவம் என்றால் என்ன?
மாறிய ரேகைகளையுடைய கைகள் அன்பும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு குலுக்கிக்கொள்ள வேண்டும்.

*
பத்துபேரின் மூளையை உடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பத்துக் கலைகள் தெரியும். பத்து வேலையை ஒரே நேரம் செய்வான்.
அந்தக் காலத்தில் சிற்பிகள் ஓவியர்கள் கவிஞர்கள் அவனைப் பத்துத் தலை ராவணனாகச் செய்தார்கள்.
அவனுக்கு இருந்தது உண்மையில் ஒரே ஒரு தலைதான். ஆனால் பத்துத் தலைக்கான அறிவும் ஆற்றவலும் அவனிடம் இருந்தது.
இப்படித்தான் கடவுளுக்கு உருவங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
காளி எப்படிப்பட்டவள் என்று அவள் சிலை சொல்லும்.

*
எம் ஜி ஆர் தன் படங்களில் யாரையுமே கொன்றதில்லை. எல்லா வில்லன்களும் இறுதியில் திருந்திவிடுவதாகவே காட்டுவார்.
குற்றம் செய்பவர்களை விட்டுவிடவேண்டு என்று அர்த்தம் இல்லை.
தண்டனை என்பது அரசுதான் வழங்க வேண்டும்.
நீதிபதி மனிதன் தான் என்றாலும் நிதானமாக ஒரு குற்றவாளியை ஊர்ஜிதப்படுத்தி பின் தீர்ப்பளிக்கும் தகுதி உடையவர்.
அவர் சரியில்லாவிட்டால், நாம் நம் அரசை உடனே மாற்றவேண்டும்.
அரசைத் தேர்வு செய்த நாம் தான் இதற்கும் பொறுப்பு!

*
வெகு சிறப்பாக
அறத்தோடும்
அன்போடும்
அறிவோடும்
அனுபவித்து அனுபவித்து
ரசித்து ரசித்து
ருசித்து ருசித்து
மகிழ்ச்சியாக வாழுங்கள்
அதைவிட சிறந்த ஞானம் வேறொன்றில்லை
அதைவிட சிறந்த பக்தி வேறொன்றில்லை
அதைவிட அடையவேண்டிய பேறு வேறொன்றில்லை

*
>>> துறவு என்றால் கெட்ட எண்ணம் செயல் சொல் சிந்தனைய துற என்பதாகும்<<<
இந்த விளக்கம் அருமை. இதைத்தான் இஸ்லாம் ஜிகாத் என்கிறது.
ஆனால் துறவு என்றதும் புத்தரைப்போல் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு மரத்தடி மலையடி என்று கிளம்பிவிடுகிறார்களே, அவர்கள் உண்மையான துறவை அவமதிக்கிறார்களா?

*
>>>தீவிர கடவுள் பற்றாளர் பகுத்தறிவு வாதியாக இருக்கலாம். அது அறிவு சார்ந்தது<<<
பெரிய விஞ்ஞானியாகவும் இருக்கலாம்,
ஐன்ஸ்டீன், அப்துல்கலாம்,....
புரட்சியாளராகவும் இருக்கலாம்
பாரதி... காந்தி....
இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம்

*

அரசை மாற்ற அறிவுடையோர் மட்டுமல்ல அறம்மிகுந்தோர் வேண்டும். இல்லாவிட்டால் மாற்றவே முடியாது

*
அல்லாஹு அக்பர் என்றால் அதன் பொருள் என்னவென்று நினைத்தீர்கள்
இறைவன் மிகப்பெரியவன்
ஏன்?
உங்களிடம் அன்பு இருக்கிறது. ஆனால் அவனிடம் நிகரற்ற அன்பு இருக்கிறது. ஆகையால் அவன் பெரியவன்
உங்களிடம் கருணை இருக்கிறது. ஆனால் அவனிடம் அளவற்ற கருணை இருக்கிறது. அதனால் அவன் பெரியவன்.

*
ஹா ஹா ஹா...
இஸ்லாம் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்கிறது வேந்தன்.
அரபு மொழி உயர்ந்ததென்றும் பிறமொழி தாழ்ந்ததென்றும் எவனொருவன் நினைத்தாலும் அவன் பெரும் பிழை செய்கிறான்.
அப்படி
மொழிகளுக்குள் வேற்றுமை இல்லை
மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை
அல்லாஹ்வின் மொழி அரபி அல்ல.
தூதரின் மொழியில் குர்-ஆன் இறங்குகிறது. அவ்வளவுதான்.
இன்னும் வேற்றுமைகளே இல்லை இல்லை என்று சொல்வதாகத்தான் இஸ்லாம் இருக்கிறது.
அதனால்தான் அது முற்போக்கு மார்க்கம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பெர்னாட்சா சொன்னதை நான் விரைவில் இடுகிறேன்.

*

மிருகம் போக்க ஒரே வழி 
அப்பழுக்கில்லாத அறம் கொள்வது மட்டுமே!

*
அறம் படைக்கப்படுவதால் மட்டும் ஒரு பயனும் இல்லை. அது பின்பற்றப்படுவதால் மட்டுமே பயன் கிட்டும்.
*
இணக்கத்தைக் கெடுப்பவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். இங்கே இருக்கும் பலநூறு நண்பர்கள் இணக்கத்தை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள்.
மதங்கள் உலக அரங்கினுக்குரியது.
கனடா வாருங்கள். வந்து பாருங்கள்.

இங்கே இந்துமதம் இருக்கிறது, பௌத்தமதம் இருக்கிறது, சீக்கியமதம் இருக்கிறது, யூத மதம் இருக்கிறது, கிருத்துவ மதம் இருக்கிறது, இஸ்லாமிய மதம் இருக்கிறது, நாத்திகம் இருக்கிறது, இன்னும் உலகில் எத்தனை மதங்கள் உள்ளனவோ அத்தனையும் இருக்கின்றன.
யாவரும் நலமுடன் வளமுடன், உங்கள் விருப்பபோல வாழுங்கள் என்று அரசு அனுமதிக்கிறது. மக்கள் அனுமதிக்கிறார்கள். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.
ஆனால் வன்முறை மட்டும் கூடவே கூடாது.
நீங்கள் அவ்வப்போது மெல்ல மெல்ல வன்முறையில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
சகிப்பது பக்குவம். அது ஒரு நாற்பதைக் கடந்துவிட்டாலே இயல்பாகவே வரவேண்டும்.
உங்களுக்கு என்னாச்சு?
கவலையாக இருக்கிறது.
ஏனெனில் கஷ்டப்படப் போவது நீங்கள் மட்டுமே 

சிறு துளி பெரு வெள்ளம் 
என் துளிகள் கடலாகும்
நான் ஈரமாய் இருக்கிறேன்
*
இந்த உலகின் மிக முக்கியமான தேவை சகோதரத்துவம்தான்
அதுதான் வன்முறையற்ற வாழ்வைத் தரும்

*




No comments: