20160730

>>>நபி சாதியை ஒழித்தாருன்னு சொல்லிட்டு சாதிஒழிய வேண்டியதில்லைன்னு சொல்றிங்க நன்பர் புகாரி<<
நான் சாதி ஒழிய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை.
சாதி ஒழிந்ததாய் நான் அறியவில்லை என்றுதான் சொல்கிறேன்.
சாதியை ஒழிப்பது இயலுமா இயலாதா என்பது இருக்கட்டும், ஆனால் சாதிகளுக்கு இடையில் இருக்கும் பாகுபாடுகள் தூள் தூளாக வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன்.
பாகுபாடுகள் தீர்ந்துவிட்டால், யார் என்ன சாதியானால் யாருக்கு என்ன?
அப்படியே இனம் அழியத் தேவையில்லை. ஆனால் இனப்பாகுபாடு அழிந்தே தீரவேண்டும்
மொழி அழியக் கூடாது ஆனால் மொழிப்பாகுபாடு அழிய வேண்டும்.
இப்படியே மனிதர்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகள் எல்லாம் தீய்ந்து கருக வேண்டும்.
அதற்கு முதலில் கோவிலில் ஆண்டான் அடிமை ஒன்றாய் நின்று வணங்குதல் வேண்டும், மேலோன் கீழோன் ஒரே கல்விநிலையத்தில் பயிலல் வேண்டும், இப்படி ஒரே ஒரே என்ற உயர்வு வேண்டும்

*

>>>பெரியார் இல்லை என்று சொன்ன கான்சப்ட் பிறப்பால் உயர்வு, தாழ்வு மற்றும் மனித அறிவுக்கு சரி என்கிற அளவில் இல்லாத மூடநம்பிக்கைகளை உள்ளடக்கிய கடவுள் கான்சப்ட்.<<<
அதனால்தான் எனக்குப் பெரியாரைப் பிடிக்கும்.
அப்படியான கான்செப்ட் கடவுளுக்கு இல்லை. தப்பாக அவர் தலையில் ஏற்றிவைப்பதை மனிதர்கள்தாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
கடவுள்....
அறுந்த இதய்ங்களுக்கான நம்பிக்கைக்கு
அழுத்தமான அறம் புகட்டுவதற்கு
சட்டம் ஒழுங்கு சீராய் இருக்க பயம் தருவதற்கு
அன்பு அறிவு அறம் வலியுறுத்துவதற்கு
மனிதநேயம் காக்க வைப்பதற்கு
*
தேவி பாலா (தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர்) >>> நாத்திகம் பேசும் யாரும் தயவு செய்து கடவுளை காட்டு என்று சொல்லாதீர் இது காலாவதியான வார்த்தைகள் அறிவு சார்ந்த விவாதங்களை முன் வைங்க நானும் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி<<<
ஒரே ஆள் பலமுறை லைக் போட முகநூலில் வசதி வேண்டும் அவ்ளோ பிடிச்சிருக்கு நீங்கள் எழுதுவது.
ஆமாம்...
ஒரு பகுத்தறிவு வாதியாய் உலகின் வன்முறையற்ற வாழ்க்கைக்கு எத்தனைத் தொண்டாற்றலாம்?
ஒரு பகுத்தறிவு வாதியாய் இதுவரையிலான அத்தனை ஆன்மிகமும் தராத அறத்தையும் அன்பையும் அறிவையும் வளர்க்க என்னென்ன செய்யலாம் என்று எத்தனைச் சிந்தனை ஓவியங்களை அறிவின் அற்புதம் கொண்டு தீட்டலாம், உலகை நல்வழிப்படுத்தலாம்?
மதங்களே ஏன் அடித்துக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு, அது அவர்களுக்கு. இதில் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது என்று எத்தனை அழகாய்க் கேட்கலாம்.
அது மதங்களையெல்லாம் விட்டு விலகி வெளியே நின்று பொதுமனிதனாய்ப் பார்க்கும் உங்களால்தானே மிக சிறப்பாகச் செய்யமுடியும். செய்கிறீர்களா? இல்லையே...
இருப்பது போதாதென்று நீங்களும் புதிதாய் ஒன்றைத் தொடங்கிவைக்கிறீர்கள்
உங்களால் அமைதி வரவேண்டுமா அல்லது அட்டூழியம் நிறைய வேண்டுமா?
பகுத்தறிவு வாதிகளிடம் பகுத்தறிவு இல்லாவிட்டால் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா?

*
Naduvai Kurichi >>>சாதி பாத்தானா,மதம் பாத்தானா,தொடைய தட்டி கொண்டு எங்களை பாதுகாத்து முன் நிற்பான்.அந்த உறவு இனி வரும் இளைஞர்களுக்கு கிடைக்காமல்,எதிர்எதிரா நிறுத்திவிட்டார்களே என வருந்துகிறேன்.<<<
ஆமாம் அதே பயம்தான் பதட்டம்தான் எனக்கும். அதனால்தான் நான் இங்கே மதம் பேசுகிறேன் இறைவன் பேசுகிறேன் இறைமறுப்பாளர்கள் பற்றி பேசுகிறேன்.
நாம் அடுத்த தலைமுறைக்கு நீர் தராமல் சாகப் போகிறோம் என்கிறது ஓர் அறிக்கை.
அதையும் விடக் கொடுமையாய் நாம் இளயவர்களுக்கு வாழ்க்கையையே தராமல் நரகத்தைத்தான் தரப் போகிறோம் என்ற நிலையை நினைத்து அதைக் காணச் சகியாமல் கண் பொசுங்குகிறது.
அழுகிறேன்!
என் அழுகைதான் என் எழுத்துக்கள்!

*
மெக்கா நடுவில் லிங்கம்!!!
*
என் முகநூல் அஞ்சல் பெட்டிக்கு வந்த ஓர் அதிர்ச்சி ஐயம்...
*
தோழரே நான் கேள்விபட்ட விஷயம் உண்மையா என்று உங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். கேட்கலாம தோழரே
ம்ம்ம்
தோழரே மெக்காவில் நடுவில் இருப்பது லிங்க அமைப்பில் உள்ளது என்கிறார்கள் உண்மையா தோழரே
அடப்பாவிகளா 😉
மெக்காவின் நடுவில் இருப்பது ஒரு சதுர கட்டிடம்.
அதனுள் இருப்பது வெறும் வெற்றிடம்
அதனுள் இருந்த முந்நூற்றி அறுபதுக்கும் மேலான சிலைகள் எல்லாம் நபி பெருமானாரால் அகற்றி எறியப்பட்டுவிட்டன
நல்லது
நீங்கள் என்னிடம் கேட்டது
இல்லையேல் புரளியைத்தான் நம்பி இருப்பீர்கள்
*
இதனால் நான் என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்வது யாதெனில், அன்பர்களே எந்த விசயத்தையும் அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.
சத்தியம் தோற்று அசத்தியம் வெல்வதை நாம் ஏற்கலாமா?
நன்றி

*
Kalyanasundaram Rangasamy>>>> அறம் செய்ய விரும்பு
....ஒளவை
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்
.....வள்ளுவர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
....கணியன் பூங்குன்றனார்.
இது போன்று சொன்ன
தெல்லாம் அறமில்லையா?
இவர்களைப் போன்றவர்கள்
எந்த மதம்?
அறத்தை சிறநத மனிதம்
போற்றும்.
அறம் கூறும் நல்லுலகம்.
எல்லாச் செயல்களும்
கடவுளின் பெயரால் தான்.<<<<
*
இவர்கள் யாவரும் சிறப்பாக அறத்தைச் சொன்னவர்கள். இனியும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் தத்துவ ஞானிகள் சொல்வார்கள்.
ஆனால் அதை மக்களை ஏற்று நடக்கச் செய்வது எப்படி?
அதற்கான தீர்வுதான் இறைவன் + மார்க்கம்.
இப்போது இங்கே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒன்றை இடவேண்டும். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர். பாரதிதாசனின் தாசர்.
*
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க?
*
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )
முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

*

1 comment:

mohamedali jinnah said...

மெல்லிய நூலில் நடந்துக் கொண்டு ஆழமான தடாகததையும் கடந்து வரக்கூடிய ஆற்றலையும் தாங்கள் பெற்றுருக்கிண்றீர்கள்
தொடரட்டும் .. கடந்து வரும் நிலையில் தடாகத்தை சுத்தப்படுத்தி மக்களுக்கு தேவையான குடிநீரையும் தடாகமாக மாற்ற முயல்வது உயர்வானது .மக்கள் பருகட்டும் ,வாழ்ந்து பயனடையட்டும் /வாழ்த்துகள்