மனமே மனமே

ஒடிந்து ஒடிந்து
விழுந்தாய்

எடுத்து எடுத்து
நிறுத்தினேன்

மனமே
நீ
மீண்டும் மீண்டும்
ஒடிந்து ஒடிந்தே
விழுந்தாய்

எடுத்து நிறுத்தும்
கவலையைக் கைவிட்டு
சனியனே என்று
மறந்தே போனேன்

ஒடியாத
வானமானாய்
அன்றுதொட்டு
நீ
ஒடிந்து விழும்
இதயங்களுக்கெல்லாம்
மயிலிறகு பொழியும்
கர்ப்பம் தரித்தாய்

பூட்டும் சாவியும்
நீதான் நீதான்
மனமே மனமே

4 comments:

பூங்குழலி said...

எடுத்து நிறுத்தும் கவலையைக்
கைவிட்டு சனியனே என்று
மறந்தே போனேன் வெறுத்துப்போய்

ரொம்ப சரியாக செய்தீர்கள் .....

பூட்டும் சாவியும் நீதான் நீதான்
மனமே மனமே

அதானே
அழகான கவிதை

சாந்தி said...

அதானே..?


பூட்டும் சாவியும் நீதான் நீதான்
மனமே மனமே

அதே ..

--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

என் சுரேஷ் said...

உங்கள் மனம் பாவம்!

ஆயிஷா said...

அதானே..?


பூட்டும் சாவியும் நீதான் நீதான்
மனமே மனமே

அதே ..


அதே. அதே....

அன்புடன் ஆயிஷா