குறள் 0384 அறனிழுக்கா தல்லவை நீக்கி


கற்றறிந்த அறவழி காப்பதில்
கணப்பொழுதும் தவறிழைத்து விடாமலும்
வன்முறை தீவிரவாதம் போன்ற
அறமற்ற அநீதிகள் ஏதும்
தன் ஆட்சியில் நிகழாமலும்
வீரம் மிகக்கொண்டும்
மானம் பெரிதெனப் போற்றியும்
நாடாள்பவனே
நல்லதோர் அரசனாவான்






அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 384

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: