குறள் 0382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம்


பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்






அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 382

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: