1

மண்ணில் ஒரு
கருவைப்போலத்தான் இருக்கிறாய்
மரணத்தில்தான் நீ பிறக்கிறாய்

மண்ணெனும் கருவறை
துக்கங்களால் சூழப்பெற்றது
ஏனெனில் அது உன்னை
வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது

மண்ணில் நீ
முழுமையான மனிதனாய்
இருக்கவே முடியாது

முழுமை பெறும்போது
நீ மரணித்திருப்பாய்

6 comments:

சாந்தி said...

////மண்ணெனும் கருவறை
துக்கங்களால் சூழப்பெற்றது/////


முழுதும் துக்கமில்லை எனலாம்..

/////ஏனெனில் அது உன்னை
வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது/////


நிஜம்..


////மண்ணில் நீ
முழுமையான மனிதனாய்
இருக்கவே முடியாது/////


மனிதனாய் இருக்க முடியாது மஹானாகலாம்..


////முழுமை பெறும்போது
நீ மரணித்திருப்பாய்////

மாற்றுக்கருத்து உண்டு ஆசான்...
முழுமை பெறும்போது மனிதன் பிறருக்காகவே வாழ்ந்து மகிழ்விப்பான் , மகிழ்வான்...
அப்படித்தான் ஞானிகள், மஹான்கள் உருவாகினர்...

சாந்தி
கற்றது கைமண் அளவு.
கல்லாதது கூகுள் அளவு.

Unknown said...

கருத்துக்களுக்கு நன்றி சாந்தி,

////முழுதும் துக்கமில்லை எனலாம்.. /////

மகிழ்ச்சி கானலைப்போல காணாமல் போகும். நிரந்தரமில்லாததை கழித்துவிட்டு துக்கங்களால் சூழப்பெற்றது என்று சொல்வது தவறல்ல என்று நினைக்கிறேன்.


////மனிதனாய் இருக்க முடியாது மஹானாகலாம்.. ////

மகான் என்பவனும் குறையுடைய மனிதனே

////முழுமை பெறும்போது
நீ மரணித்திருப்பாய்

மாற்றுக்கருத்து உண்டு ஆசான்...
முழுமை பெறும்போது மனிதன் பிறருக்காகவே வாழ்ந்து மகிழ்விப்பான் , மகிழ்வான்...
அப்படித்தான் ஞானிகள், மஹான்கள் உருவாகினர்...//////


பிறருக்காக வாழ்பவனும் ஞானிகளும் மகான்களும் குறையுடையவர்களே. நிறையான ஒருவரை நீங்கள் மண்ணில் காணமுடியாது. மரணமே காட்டும். அதை நீங்களும் அறியமாட்டீர்கள் நானும் அறியமாட்டேன் என்பதால் என் யூகத்தில் கவிதை மலர்கிறது.

சாந்தி said...

ம்... புரிந்தேன் ஆசான்

சாந்தி

ஆயிஷா said...

நல்ல கவிதை. ஆசான்.....இவ்வாறான சிந்தனை மிக்க கவிதைகள் அதிகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன் ஆயிஷா

ஹரன் ஜாபர் said...

///மகிழ்ச்சி கானலைப்போல காணாமல் போகும். நிரந்தரமில்லாததை கழித்துவிட்டு துக்கங்களால் சூழப்பெற்றது என்று சொல்வது தவறல்ல என்று நினைக்கிறேன். ////

மகிழ்ச்சி மட்டுமல்ல, துக்கமும் கானலே. காலம் இரண்டையுமே நீர்த்துப்போக வைக்கிறது. மனம் ஒரு மாயமேடை. அதில் எதுவுமே நிரந்தரம் இல்லை. துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் என்கிறீர்கள்?

////ஏனெனில் அது உன்னை
வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது/////

வடிவமைக்கப் படுவது வரமல்லவா? அதை எப்படி துக்கம் எனக் கொள்ளமுடியும்?


////மண்ணில் நீ
முழுமையான மனிதனாய்
இருக்கவே முடியாது/////


உண்மை.. மனிதனுக்கே உரிய அழுக்குகளைக் களைந்து, அவன் முழுமை அடையும்போது அவனுடைய பெயர் 'தெய்வம்'.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் பெறும்”

///பிறருக்காக வாழ்பவனும் ஞானிகளும் மகான்களும் குறையுடையவர்களே. நிறையான ஒருவரை நீங்கள் மண்ணில் காணமுடியாது. மரணமே காட்டும். ////

மரணம் எப்படி ஒருவரின் நிறை - குறைகளைக் காட்டும்? விளக்க முடியுமா?

அன்புடன்
ஹரன்

Unknown said...

ஜாபர் ஹரன்,

உங்கள் கருத்துக்க்ளுக்கு முதலில் நன்றி


//மகிழ்ச்சி மட்டுமல்ல, துக்கமும் கானலே. காலம் இரண்டையுமே நீர்த்துப்போக வைக்கிறது. மனம் ஒரு மாயமேடை. அதில் எதுவுமே நிரந்தரம் இல்லை. துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் என்கிறீர்கள்? //

இந்தப் பிரபஞ்சம் எதனால் ஆனது என்று கேட்டால் இருட்டாலும் வெளிச்சாதாலும் ஆனது என்று மனிதன் சொல்வான். ஆனாதில் பிரபஞ்சத்தின் பெரும்பகுதி கறுமைதான் இருட்டுதான். அதில் 1% கூட வெளிச்சம் இல்லை என்று விஞ்ஞானி சொல்லக்கூடும். ஜெயபாரதன் போன்றோர் இதை உறுதி செய்யலாம்.

என்றால் என் கண்ணோட்டமாக நான் பல்கிப் பெருகி இருக்கும் துக்கத்தையே எடுத்துக்கொள்கிறேன்

//வடிவமைக்கப் படுவது வரமல்லவா? அதை எப்படி துக்கம் எனக் கொள்ளமுடியும்?//

ஒரு கல் சிலையாக வடிவமைக்கப்படும்போதும் சித்திரவதைகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும். வரமே ஆனாலும் அது முழுமையடையும்வரை அது தவமே. தவம் என்பது வறுத்தநிலைதான்.


//மரணம் எப்படி ஒருவரின் நிறை - குறைகளைக் காட்டும்? விளக்க முடியுமா?//

மரணம் நிறை குறை காட்டாது. ஒருவனை நிறைவானவனாய் ஆக்கும். முழுமையடையச் செய்யும். அது துக்கம் கடந்த நிலை. நிம்மதி நிரம்பிய நிலை.