குறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி


பூப்போன்ற நெஞ்சங்களில்
பொழுதும் குடியிருக்கும்
புனிதனின் அடிதொட்டே
நாளெல்லாம் தொழுகின்ற
நல்லோர்கள் யாவரும்
நிலைபெற்ற புகழ்பெற்று
நெடுங்காலம் வாழ்வார்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 3

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 17, 2003

No comments: