குறள் 0002 கற்றதனால் ஆய பயனென்கொல்


ஆயிரமாய்
கல்வி கற்றறிந்தே
நல்ல காவியம் செய்தாலும்
அனைத்தும் அறிந்தவன்
பாதம் பணிந்திடும்
பண்பைப் பெறாதிருப்பின்
கற்றவை முற்றிலும்
வீணென்று அறிவீர்
வேறேது பயனுமில்லை

*

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனில்


*

1 அறத்துப்பால் - 1 பாயிரவியல் - 1 கடவுள் வாழ்த்து - குறள் 2

*

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

* பிப் 16, 2003

No comments: