குறள் 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின்


இவளின்
வளைந்த
புருவங்கள் மட்டும்
வளையாமல்
நேராய்
இருந்திருந்தால்
என்னை
நடுங்க வைக்கும்
துயரத்தை
இவள் விழிகள்
செய்யாதிருக்குமே



கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1086

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: