குறள் 0009 கோளில் பொறியின் குணமிலவே


மேன்மைகள் அனைத்தையும்
முழுவதும் பெற்றவனின்
அடிதொட்டுத் தொழாதவன்
காணும் கண்ணிருந்தும்
குருடன்போல்
கேட்கும் காதிருந்தும்
செவிடன்போல்
சிந்திக்கத் தலையிருந்தும்
மூடனாவான்


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 9

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

3 comments:

பிச்சைமுத்து said...

எண்குணத்தான் என்பதை பற்றி ஏதேனும் சொல்லலாமே.
ஏனெனில் இங்கு இக்குறளில் எண்குணத்தான் என்பதை(யே) கோடிட்டு கட்ட வேண்டும் என்பது என் கருத்து.

பிச்சைமுத்து.

Unknown said...

எண்குணம் என்பதை நம் விருப்பம்போலும் கொள்ளலாம்.

”மேன்மைகள் அனைத்தும் முழுமையாக பெற்றவென்” என்று நான் பொருள் கொள்ளும்போது அது காலத்தால் மாறாததாய் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று நினைத்தேன்.

அன்புடன் புகாரி

பிச்சைமுத்து said...

நன்று.
ஏற்றுக் கொண்டேன் புகாரி.