வா....டீ..... என் பவளமே என்று
காதல் பொழிய இப்போது என்னை
அழைக்கப் போகிறாயா
இல்லையா என்றாள்
பொறுக்கமாட்டாத தவிப்போடு

சூரியனைத் தொடும்
விரல்கள் உண்டா செல்லம் எனக்கு
என்றேன் அபரிமித அன்போடு

தொட்டுப்பாரடா
என் காதல் நாயகா
நீ தொட்டால் நிலவாகும்
அதன் ஒட்டுமொத்தமும் என்றாள்
கண்களில் தகதகப்பு வீச

பிறகென்ன
நான் தொட்ட்ட்ட்ட்ட்

3 comments:

thiyaa said...

நல்ல கவிதை புகாரி

மகிழ்நன் said...

ம் ம் ம் ம் ம்

சிவபாலு மாஸ்டர் said...

அன்பே அன்பு புகாரி

மிக நன்றாயிருக்கு கவிஞரே உங்கள் படையல்கள்

எழுதுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்
நல்வாழ்த்துக்கள்

சிவபாலு மாஸ்டர்