3 வளைகுடா விமானம்

விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது

கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

2 comments:

N Suresh said...

உயிரோடு பிரிவது தாங்க முடியாத வலியே, அதை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். விமானம் மேலேச் செல்வதும், அதைக்கண்டு அழுதுகொண்டே ஒரு மனைவி கையசைத்து விமானநிலையத்தில் நிற்பதுமான ஒரு காட்சி தருகிறது இக்கவிதை

அன்புடன்
என் சுரேஷ்

Unknown said...

அன்பின் சுரேஷ்,

எத்தனைப் பல்லாயிரம்முறை இந்தக் காட்சி விமான நிலையங்களில் அரங்கேற்றப்பட்டிருந்தாலும் இதன் அழுத்தம்மட்டும் குறைவதே இல்லையல்லவா?

அன்புடன் புகாரி