குறள் 1087 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்


சற்றும் சாயாமல்
நிமிர்ந்து நிற்கும்
இவளின்
முலை மேல்
கிடக்கும் துப்பட்டா
வெறி கொண்ட
ஆண் யானையின்
முகம் மீது இட்ட
பட்டாடை போலக்
காட்சி தருகிறது



கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1087

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

1 comment:

சத்ரியன் said...

அன்பா,

நம்ம தாத்தா தாத்தா தான்.