குறள் 0006 பொறிவாயில் ஐந்தவித்தான்


ஐம்புலன்களின்
ஆசை ஊற்றுகளை
அடக்கியாளும்
உண்மை நெறியாளனின்
உயர் வழிச் செல்வோர்
ஆயுள் நீடித்தே
ஆயிரங்காலம்
அற்புதமாய் வாழ்வர்



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 6

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

2 comments:

cheena (சீனா) said...

பல குறள் விளக்கங்களில் இது மனதைக் கவருகிறது

நல்வாழ்த்துகள் புகாரி

தமிழ் said...

அருமையான‌ விள‌க்க‌ம்