கால்கள் ஆகாயத்தில் மிதக்க
கைகள் கோத்துக்கொள்ள
கண்கள் படபடக்க
சுவாசத்தில் வாசனை கமழ
மனக்கயிறு கட்டி
உயிர்ப் பிணைப்போடு
இதய ஊஞ்சலாடிய பூமரம்
தன்னையே வெட்டி
சிலுவை செய்துகொள்கிறது
இது பொதுவழியல்ல என்ற
அறிவிப்புப் பலகைக்குப்
பின்னால்

1 comment:

பூங்குழலி said...

-- அருமை