மூடிக்கொண்டன
காயங்களைச் சுட்டெரித்த விழிகள்
எரிந்துபோனது இதயம்

திரும்பிக்கொண்டது
கண்ணீரை ஆனந்தமாக்கிய இதயம்
செத்துப்போனது உணர்வு

மடக்கிக்கொண்டன
கனவுகளை ஏற்றிவைத்த விரல்கள்
அணைந்துபோனது உயிர்

வாழ்வை
வண்ணமயமாக்கும்
விழிகளையோ இதயத்தையோ
ஒரே இடத்தில் தேடுவது தவறோ

வீசி எறிவதும் வேறு பெறுவதும்
வணிகம்போல்
வாழ்க்கைக்கும் நியதிதானோ

No comments: