உன் கனவுகளை
என் விழிகளுக்குள்
குறுந்தகவல்
அனுப்பிக்கொண்டிருந்த
அந்தக் காலமும் சரி
உன் கண்களின் உயிர்ப்பைத்
துண்டித்து வைத்திருக்கும்
இந்தக் காலமும் சரி
நான் உன்னை என்
வாழ்நாள் இணைப்பாகவே
அடைகாக்கிறேன்

5 comments:

சாந்தி said...

:)எப்படியோ தொடர்பில்லாத எல்லைக்கப்பால் போகாமல் இருந்தால் சரி..

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

கணணியையும் காதலையும் இணைக்கும் பாலமாய் உங்கள் கவிதைப் பயணமோ ?

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

பூங்குழலி said...

எப்படியோ தொடர்பில்லாத எல்லைக்கப்பால் போகாமல் இருந்தால் சரி..

:))))))))))))))

நான் உன்னை என்
Life Time இணைப்பாகவே
அடைகாக்கிறேன்

இதில் நிறைய ஏமாற்று வேலைகளாம் ....
நல்ல நவீன கவி

ஆயிஷா said...

ஹா..ஹா...ஹா.....
அற்புதம் சாந்தி.
ஆசான் உங்க கற்பனையும் அற்புதம்.
அன்புடன் ஆயிஷா

பிரசாத் said...

காதலில் ஏற்பட்ட பிரிவை இதைப் போல் நவீனமாக சொல்ல உங்களால் மட்டுமே
முடியும்...