கூண்டுக்குள் அடைத்து
பருக்கைகள் இட்டு
வீட்டு முற்றத்தில்
தொங்கவிட்டு அழகு பார்க்கும்
காதல் சிட்டுகளைக்
காதல் சிட்டுகள் என்று
எப்படிச் சொல்வது
திறந்துவிட்டால்தானே
காதல் தெரியும்

6 comments:

குடுகுடுப்பை said...

உங்களிடம் அனுமதி பெறாமலே ஒரு பதிவு..

கு.ஜ.மு.க: கவிதையில்லா கவிதை

ஆயிஷா said...

உண்மையான கருத்து. ஆனாலும் அதீத சுதந்திரம் கூட தப்பு தானே.
ஆயிஷா

ஆயிஷா said...

ஆயிஷா,

அதீத சுதந்திரம் ஆபத்து. சுதந்திரமே இல்லாதது நரகம். இடைப்பட்டதே எப்போதும் இனிப்பான வாழ்க்கை. இந்தக் கவிதையை வாசித்ததும் தன் துணையை கட்டாயம் இல்லாதபோதும் கூடவே இருக்கும் அன்பு காதல் என்ற நிலையில் வைத்திருக்க முயன்றால் அதுவே இக் கவிதைக்கான வெற்றி. கிட்டுமா?

பூங்குழலி said...

கூண்டிலடைத்த பின்னர் காதலிக்கும் கட்டாயத்தில் இருக்கும் பறவைகளே இங்கு அதிகம் ...

சிவா said...

காதலுக்கு அவசியமானது சுதந்திரம் தானே ஆசான்

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

காதலின் சுதந்திரத்தை கனிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அன்புடன்
சக்தி