இனியும் ஒருமுறையென
விழிமணி இழுப்பதும்

பார்க்கும் பொழுதெலாம்
பூக்கள் பொழிவதும்

மூடிய இமைக்குள்ளும்
ஈரமாய் மிதப்பதும்

முற்றாய் மறந்த நாளொன்றில்
நிலவாய்ப் புலர்வதும்

புலரும் பொற்கணங்களில்
இதழ்முகை அவிழ்ப்பதும்

ஊசிகளாய் இறங்காமல்
உணர்வுகளுக்குள்
ஊற்றுகளாய் எழுவதும்

ஆசைத்திரி தூண்டாமல்
இதயக் கிண்ணியில்
தீபச்சுடர் ஏற்றுவதும்

அழகு அழகு
பேரழகு

2 comments:

சிவா said...

கவிதையும்.. கவிதையின் தலைப்பைப் போல

பூங்குழலி said...

முற்றாய் மறந்த நாளொன்றில்
நிலவாய்ப் புலர்வதும்

இந்த கவிதை மொத்தமும் பேரழகு .....