உன் வாய்க்குள் விழுந்து
அரைபட்டுச் சிவக்கும்
வெற்றிலையாய் கிடக்க
ஏங்குகிறது ஏக்கம்

உன் கழுத்துக்குள் புதைந்து
காணாமல் போக
அலைகிறது ஆசை

சின்னவனாய் பிறந்து
கூந்தல் அலையும்
உன் நெற்றி முற்றத்தில்
மல்லாந்து
மணிக்கணக்காய்க் கிடக்க
தவிக்கிறது தாகம்

காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்

1 comment:

பூங்குழலி said...

அழகான கவிதை