சங்கிலித் தொடராய் வரும்
உன் நினைவுகளில் வசப்பட்டு
நான் முதன் முதலில் வடிக்கின்ற கவிதை
இது உன் காதோடு சொல்லவேண்டிய கதை

உள்ளம் தொட்ட நீ
என் உயிர் தொடப் போகும்
வசந்தநாளுக்காக நான்
சத்தியமாய்த் தவமிருக்கிறேன்

ஆகாயத்தில் பறக்க
சிறகுகள் வேண்டுமாம்
உன் பவளப் புன்னகை போதுமென்கிறேன்
நான்

உன் நீளக் கண்களில் ஏதோ
பளிச் சென்று ஒரு வெளிச்சம்
அந்த வெளிச்சமே
என் கனவுகள் குவிந்து கிடக்கும்
வனாந்திரத்துக்கு வழிகாட்டும்
ஒற்றைச் சுடர்

1 comment:

vasu balaji said...

/ஆகாயத்தில் பறக்க
சிறகுகள் வேண்டுமாம்
உன் பவளப் புன்னகை போதுமென்கிறேன்
நான்/

ம்ம்ம்
/உன் நீளக் கண்களில் ஏதோ
பளிச் சென்று ஒரு வெளிச்சம்
அந்த வெளிச்சமே
என் கனவுகள் குவிந்து கிடக்கும்
வனாந்திரத்துக்கு வழிகாட்டும்
ஒற்றைச் சுடர்/

ம்ம். போங்க. பொறாமையா இருக்கு.